தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, எருது விடுதல் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை – காவல்துறை விளக்கம்!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, எருது விடுதல் உள்ளிட்ட போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது குறித்து தமிழ்நாடு காவல்துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது.
போட்டிகளுக்கு தடை:
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு எதிராக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
Follow our Twitter Page for More Latest News Updates
பல்வேறு கட்ட விவாதங்களுக்குப் பிறகு நடப்பு ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை, அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ள இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த ஆண்டு முதன் முதலாக சென்னையிலும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழக மாவட்ட ஆட்சியர்களுக்கு புது உத்தரவு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு, எருது உள்ளிட்ட போட்டிகளை நடத்த அரசு தடை செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது குறித்து விளக்கம் அளித்த காவல்துறை மேற்கண்ட போட்டிகளுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை. இது போன்ற போலி தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.