இந்தியாவில் அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய தடை – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

0
இந்தியாவில் அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய தடை - மத்திய அரசு அதிரடி உத்தரவு!
இந்தியாவில் அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய தடை - மத்திய அரசு அதிரடி உத்தரவு!
இந்தியாவில் அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய தடை – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

இந்தியாவில் அரிசியின் சில்லறை விலை ஓராண்டிற்கு 11 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து இருப்பதால் பிற வகை அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

அரசு தடை

நாடு முழுவதும் அரிசியின் சில்லறை விலை ஒரு ஆண்டுக்கு 11 சதவீதத்திற்கு மேலாக உயர்ந்து இருக்கிறது. அதனால் பாஸ்மதி அல்லாத பிற வகை வெள்ளை அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த நடவடிக்கையானது உள் நாட்டில் அரிசி விலையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு மேற்கொண்டு இருப்பதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளிநாட்டு வர்த்தகத்துறை இயக்குநரகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தங்கத்தின் விலை திடீர் சரிவு – நகைக்கடையில் அலைமோதும் தாய்மார்கள்!

அதில் பாஸ்மதி அல்லாத பிற வகைகளை சேர்ந்த வெள்ளை நிற அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது எனவும், அந்த வகை அரிசியை பாதியளவில் குத்தியது, முழுவதுமாக குத்தியது, தீட்டப்பட்ட அரிசி என எந்த வடிவிலும் ஏற்றுமதி செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே கப்பல்களில் ஏற்றுமதிக்காக ஏற்றப்பட்டுவிட்ட அரசிக்கு இந்த தடை பொருந்தாது எனவும், சில அசாதாரண சூழல்களில் இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கியமாக பிற நாடுகளின் உணவுப் பாதுகாப்பு தொடா்பான விஷயம் மற்றும் பிற நாடுகளின் கோரிக்கைகள் அடிப்படையில் அரிசி ஏற்றுமதித் தடையில் இருந்து தளர்வுகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!