சபரிமலை செல்ல திட்டமிட்டோருக்கு எச்சரிக்கை அறிவிப்பு – வெள்ள அபாயம்!
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் 10 அணைகள் உள்ள பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே சபரிமலை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சபரிமலை:
கொரோனா தாக்கத்தின் காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் சபரிமலையில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அரபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நில சரிவின் காரணமாக 25 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
CBSE முதற்கட்ட தேர்வு அட்டவணை வெளியீடு 2021 – 36 லட்சம் பேர் பதிவு!
எனவே கனமழை காரணமாக காக்கி அணை நிரம்பி வழிவதால் அந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பம்பை நதியில் 15 செ.மீ. அளவுக்கு நீரின் அளவு அதிகரிக்கும் என்றும் அக்டோபர் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் சபரிமலைக்கு பக்தர்களை அனுமதிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது ஐப்பசி மாத பூஜைகளுக்காக அக்டோபர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இப்போதைக்கு சபரிமலை யாத்திரையை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. பம்பை நதியில் தண்ணீரின் அளவு அதிகரித்துவிட்டால், அதன் பின் சபரிமலை யாத்திரை மேற்கொள்வோரை மீட்பது சிரமமாகிவிடும் என மாநில வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் கூறியுள்ளார்.
WhatsApp குரூப் காலில் இடையில் சேர்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
காக்கி நதியின் இரு மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மழை தற்போது குறைந்துள்ளது. மீண்டும் 20ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.காக்கி, சோலையாறு, மாட்டுப்பட்டி, மூழியாறு, குண்டாலா, பீச்சி உள்ளிட்ட 10 அணைகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அணைகள் பத்தனம்திட்டா, இடுக்கி, திருச்சூர் மாவட்டங்களில் அமைந்துள்ளன. மற்ற 8 அணைகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Swmiya saranam ayyappa