தமிழகத்தில் ஜூன் 14 வரை மீன் பிடிக்க தடை – மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!
தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு மீன்பிடிக்க ஜூன் 14 வரை அரசு தடை விதித்துள்ளது. இத்தடையை மீறி மீன் பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.
மீன்பிடி தடை காலம்:
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் வரையிலான மாதங்களில் கடல் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற காலமாக உள்ளது. இத்தகைய நேரத்தில் எவ்வித இடையூறும் இல்லாமல் மீன்களின் இனபெருக்கத்தை மேம்படுத்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மீன் வளம் பெருகும்.
இந்தியாவில் 7,000 – ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி மீண்டும் துவக்கம்!
அந்த வகையில் நடப்பு ஆண்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 61 நாட்களுக்கு விசைப்படகு மற்றும் இழுவை படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய தடையை மீறி மீன்பிடித்தால் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அத்துடன் தற்போது கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் வரும் 14 ஆம் தேதி 12 மணிக்குள் மீண்டும் கரை திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download