பாக்கியா வங்கிக்கணக்கில் திருடு போன பணம், அதிர்ச்சியில் எழில் – வெளியான ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா பெரிய சமையல் ஆர்டரை முடித்து ரூ.3 லட்சத்தை வாங்குகிறார். அதை பண மோசடி செய்யும் கும்பல் திருடி விட்டனர். இது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பாக்கியலட்சுமி ப்ரோமோ:
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிற்கு 1000 பேருக்கு சமைக்க வேண்டும் என்ற மிகப்பெரிய சமையல் ஆர்டர் கிடைத்துள்ளது. அதை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறப்பாக செய்து முடிக்கிறார் பாக்கியா. பின் பாக்கியா சொன்ன காசை விட கூடுதலாக ரூ.3 லட்சத்தை தொழிலதிபர் கொடுக்கிறார். அதனால் பாக்கியா மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். பாக்கியாவிற்கு வேலை பார்த்து கொடுத்த அனைவரும் காசு கேட்கின்றனர். பாக்கியா நாளை அனைவருக்கும் காசு கொடுப்பதாக சொல்கிறார்.
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 போட்டியாளர்களின் முழு விபரங்கள் – மிக பிரம்மாண்டமாக துவக்கம்!
இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பாக்கியாவும் செல்வியும் அமர்ந்திருக்க பாக்கியாவிற்கு போன் வருகிறது. அதில் பேசிய நபர் நான் பேங்கில் இருந்து பேசுவதாகவும், உங்க ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்டுள்ளது என சொல்லி ஏடிஎம் நம்பர் மற்றும் பின் எல்லாம் வாங்குகிறார். அதன் பின் ஓடிபியை சொல்ல சொல்கிறார். பாக்கியாவும் எதுவும் தெரியாமல் அனைத்தையும் சொல்கிறார்.
அதன் பின் பாக்கியாவும், எழிலும் பேங்க் செல்கின்றனர். சலான் எழுதி காசு எடுக்க பாக்கியா கொடுக்கிறார். அப்போது உங்க கணக்கில் காசு எதுவும் இல்லை என வங்கி ஊழியர் சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இவ்வாறாக ப்ரோமோ வெளியாகி உள்ளது. மேலும் இன்றைய எபிசோடில் கோபி பணம் இல்லாமல் இருப்பது போல கதைக்களம் அமைந்துள்ளது. அதனால் பாக்கியா என்ன செய்வார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாக்கியா அக்கவுண்ட்ல இருந்து கோபி தான் பணத்தை எடுத்துவிட்டார் என்று முதலில் தோன்றியது ஏனென்றால் அவருக்கு பணக்கஷ்டம் உள்ளது அப்புறம் அவரு சொல்லி மேனேஜர் மூலமா ஒருவேளை எடுத்து இருக்க வாய்ப்பு இருக்கு கொஞ்சம் பரபரப்பா தான் போகுது