முதலிரவிற்கு தயாராகும் சந்தியா சரவணன், ஆடி மாதம் என தடைபோடும் சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சரவணனும் சந்தியாவும் முதலிரவிற்காக தயாராகி கொண்டிருக்கின்றனர். பின் சிவகாமி இது ஆடி மாசம் அதனால் பார்த்து நடந்துக் கொள்ளுங்கள் என சந்தியா மற்றும் அர்ச்சனாவிடம் சொல்கிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சரவணன் கடையில் இருக்கும் போது கை சுட்டுவிடுகிறது. உடனே சக்கரை சந்தியா வாங்கி கொடுத்த கை உறையை கொண்டு வந்து கொடுக்கிறார். பின் சரவணன் இதை நாள் எனக்கு இது வாங்க வேண்டும் என்று தோணவில்லை என சொல்கிறார். பின் சந்தியாவிற்கு பூ வாங்க சொல்கிறார். பூ மற்றும் இனிப்பு எடுத்துக் கொண்டு சந்தியாவை பார்க்க செல்கிறார். மறுபக்கம் சந்தியாவும் முதலிரவிற்கு தேவையான பூக்களை வாங்கி கொண்டுவந்து அலங்காரம் செய்கிறார்.
பின் பார்வதி பாஸ்கருடன் போனில் சாட் செய்து சிரித்துக் கொண்டிருக்க பின்னால் இன்று அர்ச்சனா அதை பார்த்து என் தங்கச்சி வாழ்க்கையை கெடுத்துவிட்டு நீ சந்தோசமாக இருக்கியா ஒரு நாள் உன்னை மாட்டிவிடுறேன் என நினைக்கிறார். பின் பார்வதியிடம் வந்து முன்னாடி என்னுடன் தான் நெருக்கமாக இருப்ப இப்போ என்ன சந்தியா பக்கம் போய்ட்ட என கேட்க ஆமாம் முதலில் உங்களுடன் இருந்தேன் இப்போ சந்தியா செய்வது சரி என்று தோணுகிறது அதனால் அவருடன் இருக்கிறேன் என பார்வதி சொல்கிறார்.
அந்த நேரத்தில் சிவகாமி அங்கே வருகிறார். அவர் சந்தியாவை அழைத்துவிட்டு பார்வதியை உள்ளே போக சொல்கிறார். பின் அர்ச்சனா மற்றும் சந்தியாவிடம் ஆடி மாசம் தொடங்கிவிட்டது. வழக்கமாக ஆடி மாசம் அம்மா வீட்டிற்கு அனுப்ப வேண்டும். ஆனால் அதற்கு இப்போது வழி இல்லை அதனால் நீங்களே பார்த்து இருந்துக்கோங்க என சொல்கிறார். உடனே அர்ச்சனா இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது என நினைத்துக் கொள்கிறார். சந்தியா ஏற்பாடு செய்தது அனைத்தும் வீணாகிவிட்டதை நினைத்து வருத்தப்படுகிறார்.
மேலும் இவர்கள் பேசியதை கேட்ட சரவணன் எல்லாம் வீணாகிப்போனதை நினைத்து வருத்தப்படுகிறார். பின் ரூமிற்கு வந்து சந்தியா செய்த அலங்காரத்தை எல்லாம் கழட்டிவிடுகிறார். பின் சரவணன் பார்வதியிடம் சென்று நன்றாக படிக்க வேண்டும் என சொல்லிவிட்டு வருகிறார். பின் சந்தியாவை பார்க்க ரூமிற்கு வர இது ஆடி மாசம் என சொன்னதை சந்தியா சொல்கிறார். ஆனால் ஒன்றாக மேலே படுங்க என சந்தியா சொல்கிறார். மறுநாள் ஆதி மயிலிடம் பேசிக் கொண்டிருக்க, சிவகாமி ஆதியை சத்தம் போடுகிறார்.
சௌந்தர்யாவிடம் பாரதி பிரசவம் பார்த்ததை சொன்ன கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
பின் அர்ச்சனா அம்மா போன் செய்து அவர் தங்கச்சி தற்கொலை செய்து கொண்டதை சொல்கிறார். ஆனால் அர்ச்சனா சிவகாமியிடம் அம்மாவிற்கு உடல்நிலை சரி இல்லை என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். பின் செந்திலிற்கு போன் செய்து நடந்ததை சொல்லி அழுகிறார். அதன் பின் சரவணன் ஆடி மாதம் முடிய எத்தனை நாள் இருக்கிறது என காலெண்டரில் பார்க்கிறார். பின் சந்தியா வந்து என்ன பண்றீங்க என கேட்க எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்புகிறார். பின் சந்தியாவும் காலெண்டர் பார்த்து இன்னும் 30 நாள் இருக்கிறது என அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.