கோபியை கண்கலங்க வைத்த மயூ.. அதிர்ச்சியில் ராதிகா – வெளியான “பாக்கியலட்சுமி” ப்ரோமோ!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி தன்னுடைய குடும்பத்தை விட்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில், மயூ கோபியை அப்பா என கூப்பிடவா என கேட்கிறார். அது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் கதை சென்று கொண்டிருக்கிறது. கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டு படாதாபாடு படுகிறார். ஒரு காபி கூட கிடைக்காமல் கோபி நிலைமை திண்டாட்டமாக இருக்கிறது. ஆனால் பாக்கியா தன்னுடைய குடும்பத்தையும் பார்த்து தொழிலையும் பார்த்து கோபிக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும் அனுப்பி வைக்கிறார். இதற்கிடையே ராதிகா சமையல் பிடிக்காமல் கோபி வேறு வழி இல்லாமல் சாப்பிடுகிறார்.
Exams Daily Mobile App Download
அது மட்டுமில்லாமல் ராதிகாவும் மயூவும் மெத்தையில் தூங்கிவிட்டு கோபியை கீழே படுக்க சொல்கின்றனர். என்னுடைய வீட்டில் எவ்வளவு பெரிய கட்டில் அதில் நான் மட்டும் எப்படி தூங்குவேன் என நினைத்து பார்த்து கோபி வருத்தப்படுகிறார். தற்போது வெளியான ப்ரோமோவில் ராதிகா மயூவிற்கு முன்னதாக கோபி வந்து கட்டிலை பிடித்துக் கொள்கிறார்.
முக்கிய Prime Time சீரியலில் கதாநாயகியாக களமிறங்கும் பிரபல வில்லி நடிகை – உற்சாகத்தில் ரசிகர்கள்!
Follow our Instagram for more Latest Updates
ராதிகா என்ன சீக்கரம் வந்துட்டீங்க என கேட்க, உடனே கோபி ஆமாம் எனக்கு இடம் வேண்டும் என சொல்கிறார். அப்போது மயூ நீங்க இருவரும் கல்யாணம் செய்து கொண்டீர்களா என கேட்க, என்ன மயூ உனக்கு முன்னாள் தான நான் அம்மா கழுத்தில் தாலி கட்டினேன் என கோபி சொல்கிறார். அப்போ நான் ஏன் உங்களை அங்கிள் என கூப்பிட வேண்டும், நான் அப்பா என கூப்பிடவா என மயூ கேட்க, ராதிகாவும் கோபியும் அதிர்ச்சி அடைகிறார்கள். இந்த விஷயம் இனியாவிற்கு தெரிய வந்தால் அதை அவர் எப்படி ஏற்றுக் கொள்வார் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.