முக்கிய Prime Time சீரியலில் கதாநாயகியாக களமிறங்கும் பிரபல வில்லி நடிகை – உற்சாகத்தில் ரசிகர்கள்!
கலைஞர் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட பொன்னி கேர் ஆப் ராணி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும் ஸ்வேதா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மாற்றப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதிலாக பிரபலமான நடிகை ஒருவர் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது
பொன்னி கேர் ஆப் ராணி
தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட நடிகையாக இருந்து வந்த ராதிகா சரத்குமார், சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், அவருடைய சீரியல்கள் குடும்பக் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் அதற்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். இந்நிலையில் அவர் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட பொன்னி கேர் ஆப் ராணி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
Exams Daily Mobile App Download
இந்த சீரியலில் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ், நடிகர் மனோகர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் இனி வரும் எபிசோடுகளில் கல்யாண காட்சிகள் வர இருக்கிறது. அதாவது சூர்யா ஸ்வேதாவின் கல்யாண காட்சிகள் வர இருக்கிறது. இதில் ஸ்வேதா கதாபாத்திரத்தில் நடிகை அருள்ஜோதி களமிறங்கினார். இவர் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கதிர் உயிருக்கு வரும் ஆபத்து.. காப்பாற்ற களமிறங்கிய அண்ணன்கள் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கலக்கல் ப்ரோமோ!
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் நடிகை அருள்ஜோதி தற்போது ஸ்வேதா கதாபாத்திரத்தில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் ஸ்வேதா கதாபாத்திரத்தில் நடிகை மவுலிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் நந்தினி கதாபாத்திரம் மூலமாக பிரபலமானவர். மேலும் இவர் இதுவரை வில்லியாக நடித்து வந்த நிலையில் தற்போது அவர் பாஸிட்டிவ் ரோலில் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.