சூடு பிடிக்கும் பாக்கியாவின் புது பிசினஸ், அமிர்தா குடும்பத்திற்கு மீண்டும் உதவி செய்யும் எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் அமிர்தா குடும்பத்தினருக்கு உதவி செய்கிறார். பாக்கியாவின் புதிய பிசினஸ் பலகையை பார்த்து கோபி கோபமடைந்து திட்டுகிறார். பின்னர் பாக்கியாவிற்கு ஆர்டர்கள் வர அதை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் அமிர்தா குடும்பத்தினருக்கு தனது அம்மா செய்த இனிப்பை எடுத்துக் கொண்டு செல்கிறார். அமிர்தாவின் அப்பா இனிப்பு சாப்பிடணும் போல இருந்தது என்று சொல்லி சாப்பிடுகிறார். அனைவரும் ஊருக்கு செல்ல இரயில் டிக்கெட் எடுத்தியா என அமிர்தாவிடம் கேட்க டிக்கெட் இல்லை என்று சொல்கிறார்.
எழில் அவர்களை காரில் போகலாம் என்று ஐடியா தருகிறார். கார் டிரைவர் என எல்லா ஏற்பாடும் நானே செய்கிறேன் என்று சொல்கிறார். கோபி வீட்டிற்கு வந்ததும் வெளியே பாக்கியாவின் புதிய பிசினஸ் பலகையை பார்த்து கோவமடைகிறார். சத்தமிட்டு பாக்கியாவை அழைக்க, பாக்கியாவும், ஈஸ்வரியும் வருகின்றனர். அப்போது இப்படி எல்லார் பாக்கிற மாதிரி உன் போன் நம்பர் கொடுத்திருக்க எதாவது பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்று கேட்கிறார்.
ஈஸ்வரியும் பதிலுக்கு சத்தம் போடுகிறார். ஏற்கனவே மசாலா விற்க இப்படி தான் நம்பர் குடுத்தேன் என்று சொல்ல காதில் வாங்காமல் கத்திவிட்டு உள்ளே செல்கிறார். பின்னர் எழில் மற்றும் தனது மாமாவிடம் சொல்ல அவரும் நீ மசாலா கொடுக்க எந்த பிரச்சனையும் வரவில்லை என்று சொல்கிறார். உடனே பாக்கியாவின் போன் அடிக்க ஆர்டர் வருகிறது.
பாக்கியா மகிழ்ச்சியுடன் தயார் செய்து கொண்டிருக்க ஜெனியும் செல்வியும் உதவி செய்கின்றனர். பின்னர் பாக்கியா சாப்பாடை எடுத்துக் கொண்டு வண்டியில் கிளம்புகிறார். முதலில் ராதிகா வீட்டில் கொண்டுபோய் கொடுக்கிறார். ராதிகா ஆல் தி பெஸ்ட் சொல்லி அனுப்புகிறார். அடுத்த இடத்திற்கு பாக்கியா புறப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.