பாரதி கண்ணம்மா இணைந்தது போல கனவு காணும் வெண்பா, வீட்டில் இருந்து கிளம்பும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதியும் கண்ணம்மாவும் மனம் விட்டு பேசி நெருக்கமாக இருப்பது போல வெண்பா கனவு காண்கிறார். பின்னர் கண்ணம்மா லட்சுமிக்கும், ஹேமாவிற்கும் நல்ல பழக்கவழக்கங்கள் சொல்லி கொடுக்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கண்ணம்மா கன்னத்தை தொட்டு பழைய மாதிரி பேசுகின்றனர். கண்ணம்மா பாரதியை மாமா என்று அழைக்கிறார். இருவரும் பழைய பாசத்துடன் கட்டி அணைத்து கொள்கின்றனர். உடனே வெண்பா பதறியடித்து எந்திரிக்கின்றார். இவ்வளவு நேரம் பாரதி கண்ணம்மாவை பற்றி கனவு காண்கிறார்.
பின்னர் கண்ணம்மா லட்சுமிக்கும் ஹேமாவிற்கும் நல்ல பழக்கவழக்கங்கள் சொல்லி கொடுக்கிறார். குட் டச், பேட் டச் குறித்த விஷயங்களை கண்ணம்மா சொல்லி கொடுக்கிறார். பாரதி ஹேமாவிற்கு அம்மா இருந்தால் இதெல்லாம் சொல்லி வளைத்திருப்பார் என நினைத்துக் கொண்டும் அவரும் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லி கொடுக்கிறார்.
நாட்டின் 75 வது சுதந்திரதின விழா கொண்டாட்டம் – பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்!
பின் கண்ணம்மாவை உக்காரவைத்து ஹேமாவும், லட்சுமியும் கண்ணம்மாவை வரைந்து பாரதியிடம் காட்டுகின்றனர். இருவர் வரைந்தும் நன்றாக உள்ளது என பாரதி சொல்கிறார். பாரதியின் ட்ரெஸ்களை துவைத்து கொடுக்கிறார் கண்ணம்மா. பின்னர் பாரதி கிளம்பி செல்ல பாரதி போட்டிருந்த ட்ரேஸ்களை கண்ணம்மா கொடுக்கிறார்.
நாட்டில் இதுவரை 52 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அறிவிப்பு!
பின்னர் கொரோனா ரிசல்ட் வருகிறது. அதை வாங்கிக் கொண்டு பாரதி அங்கிருந்து கிளம்புகிறார். பாரதி போக மனமில்லாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பின்னர் குழந்தைகளுக்கு பாய் சொல்லிவிட்டு பாரதி அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.