ராதிகாவை விவாகரத்து செய்..! ஈஸ்வரி சொல்லை கேட்பாரா கோபி? “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா குடும்பத்துடன் சந்தோசமாக இருப்பதை பார்த்து கோபிக்கு பொறாமை வர, ஈஸ்வரி ராதிகாவை பிரிய சொல்லி மனதை மாற்றுகிறார். கோபி மாறுவாரா என்பது அடுத்து வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா வீட்டில் கோபி ராதிகா உடன் தங்கினாலும் கோபிக்கு தன் குடும்பத்தில் தான் சந்தோசம் இருக்கிறது என புரிய வருகிறது. இந்நிலையில் ஈஸ்வரி ராதிகாவை பிரிந்து வர சொல்லி கோபி மனதை மாற்றுகிறார். கோபியால் ராதிகாவை பிரியவும் முடியாமல், குடும்பத்தை விடவும் முடியாமல் திணறுகிறார். இந்நிலையில் இனி வரும் எபிசோடுகளில் கோபி மனம் மாறி அவர் ராதிகாவை பிரிய முடிவு செய்கிறார்.
மீண்டும் ஊரடங்கு உத்தரவுகள்?? விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா தொற்று – எச்சரிக்கும் மருத்துவ குழு!
ஆனால் ராதிகா நான் தான் கோபியின் தாலி கட்டிய மனைவி, பாக்கியா தான் இந்த வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என சண்டையிட கோபி என்ன முடிவு எடுப்பார் என்பது இனி வரும் கதையில் பெரிய திருப்பமாக வர இருக்கிறது. மேலும் மயூராவை சொந்த மகளாக கோபி நடத்தாமல் இருப்பது, இனியாவை அதிகமாக கொஞ்சுவது எல்லாம் ராதிகாவுக்கு பிடிக்காமல் இருக்க, இனி கோபியின் நிலைமை திண்டாட்டமாக இருக்க போகிறது.