மத்திய சுகாதார அமைச்சகத்தின் புதிய திட்டம் – செப்.17 முதல் அமல்!
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு செப்.17 ஆம் தேதி முதல் மத்திய சுகாதார அமைச்சகம் ஆயுஷ்மான் பவ என்கிற திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பவ:
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு பொது மக்களின் நலனுக்காக ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், வரும் செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய சுகாதார அமைச்சகம் ஆயுஷ்மான் பவ என்கிற திட்டத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
Join Our WhatsApp Group” for Latest Updates
அதாவது, இந்த திட்டத்தின் மூலமாக மாநிலம் முழுவதும் ஆயுஷ்மான் மேளாக்கள் நடத்தப்படும் எனவும், சுகாதார முறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவது மற்றும் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சை வழங்குவது குறித்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தங்கத்தின் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு – சவரனுக்கு ரூ.44,120க்கு விற்பனை!
மேலும், மாநிலம் முழுவதும் முகாம்கள் அமைக்கப்பட்டு 60 ஆயிரம் பேருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்படும் எனவும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து பயனாளர்களுக்கும் சரியான சுகாதார சேவைகள் இந்த திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.