தமிழகத்தில் தங்கத்தின் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு – சவரனுக்கு ரூ.44,120க்கு விற்பனை!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்து சவரனுக்கு ரூ.44,120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை:
உள்நாட்டில் பங்குசந்தையில் ஏற்படும் ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றை பொறுத்து தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5980 க்கும், சவரனுக்கு ரூ.47,840க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
Follow our Instagram for more Latest Updates
மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5510 க்கும், சவரனுக்கும் ரூ.44,080க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து, நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.
கனமழை காரணமாக இன்று (செப் 11) பள்ளிகளுக்கு விடுமுறை.. மேலும் நீடிக்க வாய்ப்பு – UP அரசு அறிவிப்பு!
அதாவது, சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.5985 க்கும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.47,880க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.5515 க்கும், சவரனுக்கும் ரூ.40 அதிகரித்து ரூ.44,120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.