TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஜூலை 22ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!
தமிழகத்தில் TNPSC குரூப் 4 & VAO தேர்வு இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்தி வருகிறது.
TNPSC குரூப் 4 & VAO:
தமிழகத்தில் குரூப் 4 தேர்வானது கிராம நிர்வாக அலுவலர், டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 பணியிடங்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வெளியான அறிவிப்பில் 7382 பணியிடங்கள் தகுதி உள்ள நபர்களை கொண்டு நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த 7382 பணியிடத்திற்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதால் இந்தாண்டு போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தேர்வானது 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும் ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த குரூப் 4 தேர்வுக்கு தயாராக நினைப்பவர்கள் முதலில் 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள பள்ளி பாடப் புத்தகங்களை படிக்க வேண்டும்.
குறிப்பாக தமிழில் செய்யுள் பகுதியை படிக்கும்போது, பாடல்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது நல்லது. செய்யுள் பாடல்களை படிக்கும் போது கூடவே அதிலுள்ள அர்த்தத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். நூல் குறிப்பு, நூலாசிரியர் குறிப்பு, நூலாசிரியர் குறித்த தகவல்களையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தற்போது தேர்வுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் நாளை (22 .07.2022) பொதுத்தமிழ் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயனடையவும்.
TNPSC Group IV:பொதுத்தமிழ் PREVIOUS YEAR 5(100)
Mock Test “WhatsApp Group” Join Now
Super
Super