நீட் தேர்வர்கள் கவனத்திற்கு – ஹால் டிக்கெட் குறித்த முக்கிய அறிவிப்பு!

0
நீட் தேர்வர்கள் கவனத்திற்கு - ஹால் டிக்கெட் குறித்த முக்கிய அறிவிப்பு!
நீட் தேர்வர்கள் கவனத்திற்கு - ஹால் டிக்கெட் குறித்த முக்கிய அறிவிப்பு!
நீட் தேர்வர்கள் கவனத்திற்கு – ஹால் டிக்கெட் குறித்த முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் ஜூலை 17ம் தேதி 2022ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பிற்கான நீட் என்னும் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு:

இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற படிப்புகளில் சேர நீட் எனும் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த வருடம் நீட் தேர்வு செப்டம்பர் மாதம் 12ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் சுமார் 16 லட்சம் மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். அதனை தொடர்ந்து 2022ம் ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல் 2ம் தேதி முதல் தொடங்கியது. அதனை தொடர்ந்து மே 20ம் தேதி வரை விண்ணப்ப பதிவுகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இத்தேர்வுக்கு நாடு முழுவதும் தற்போது 18.72 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் கடந்த 11ம் தேதி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. இதனை விண்ணப்பதாரர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதனை தொடர்ந்து தற்போது ஹால் டிக்கெட்டில் தேர்வுகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தேர்வர்கள் தேர்வு முடிந்தவுடன் ஹால் டிக்கெட்டையும் தேர்வறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த தேர்வர்களின் விடைத்தாள் திருத்தப்படாது என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

  • மேலும் தேர்வு எழுத வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
  • ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
  • கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தேர்வர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
  • முகக்கவசம் அணியாமல் வரும் தேர்வர்களுக்கு N95 முகக்கவசம் வழங்கப்படும்.
  • உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். வெப்பநிலை அதிகமாக உள்ள தேர்வர்கள் தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
  • தேர்வு மையத்திற்கு 1.30 மணிக்குள் தேர்வர்கள் வர வேண்டும். அதற்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!