UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – நேர்காணல் ஒத்திவைப்பு!
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது CISF மற்றும் CAPF பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு பற்றிய விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.
UPSC தேர்வர்கள் கவனத்திற்கு:
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது 2021 ஆம் ஆண்டு CISF மற்றும் CAPF பணியிடங்களுக்கான அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, இப்பணியிடங்களுக்கான நேர்காணல் தவிர மற்ற அனைத்து தேர்வு செயல் முறைகளும் வெற்றிகரமாக இந்தியா முழுவதும் நடைபெற்றது.இந்நிலையில் இது சம்மந்தப்பட்ட புதிய நோட்டீஸ் ஒன்று UPSC-இன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று (நவ. 4) 6 மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!
Exams Daily Mobile App Download
அதாவது CISF மற்றும் CAPF 33% சீனியாரிட்டி ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக திவாகர் பாண்டே என்பவர் தாக்கல் செய்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு இணங்க, CAPF தேர்வு-2021 இன் Personality Tests/நேர்காணல்கள் மறு உத்தரவு வரும் வரை உடனடியாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் மறு அறிவிப்பு வரும் வரை, UPSC-ன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.