தமிழகத்தில் இன்று (நவ. 4) 6 மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!
தமிழகத்தில் தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ( நவ.4) விடுமுறை விடப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததை அடுத்து பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் பல சாலைகளில் வெள்ளப்பெருக்காய் காட்சி அளிக்கிறது. மேலும் தொடர் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர்,ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் நேற்று இரவில் இருந்து தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( நவ. 4) விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இன்று (04.11.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோபியை டாடி டாடி என அழைத்த மயூ.. வருத்தப்பட்ட இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
திருவாரூர் மாவட்டத்திலும், மயிலாடுதுறை மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மழை பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் என அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தி இருக்கிறது.