ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கார்டுகள் ரத்து.. அரசின் கடும் நடவடிக்கை! பயனர்களே உஷார்!
இந்தியாவில் ரேஷன் அட்டைதாரர்களுக்கான விதிகள் மாற்றபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் தகுதியுடையவர்களுக்கு மட்டுமே ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
ரேஷன் கார்டு:
இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன்பெறும் நோக்குடன் ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இணைந்து மக்கள் மாதந்தோறும் ரேஷன் பொருட்களை பெற சில விதிமுறைகள் உள்ளது. ஆனால் சிலர் இந்த விதிமுறைகளை மீறி அதாவது தகுதி இல்லாத நபர்கள் கார்டை பயன்படுத்தி ரேஷன் பொருட்களையும், அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெற்று வருவது கண்டறியப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
தற்போது நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் இலவச ரேஷன் திட்டத்தை பயன்படுத்தி மோசடி செய்து வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதில் வசதி படைத்தவர்கள் ரேஷன் பொருட்களை கடையில் குறைந்த விலைக்கி வாங்கி அதனை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டால் தகுதியுடையவர்களுக்கு பொருட்கள் கிடைக்காமல் போய் விடுகிறது.
EPFO பயனர்களுக்கு 8.1% வட்டியை அளிக்க உள்ள ஆணையம் – முக்கிய தகவல் வெளியீடு!
Exams Daily Mobile App Download
அதனால் ரேஷன் திட்டத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வரும் 10 லட்சம் பேர் பேரின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து முதலில் தகுதி பெறாத ரேஷன் அட்டைத்தரர்களின் விவரம் அடங்கிய பட்டியல் மாவட்டத் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பபடும். இவை சரிபார்க்கப்பட்டு தகுதியில்லாதவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அத்துடன் கார்டு அவர்களிடம் இருந்து திரும்ப பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.