+2 பொதுத்தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு? மாநில அரசு அறிவிப்பு!!
அசாம் மாநிலத்தில் பெருகி வரும் நோய்த்தொற்று காரணமாக மே மாதம் நடக்கவிருந்த +1 மற்றும் +2 பொதுத்தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளதாக அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு:
கொரோனா பெருந்தொற்று காரணமாக +1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க அசாம் மாநில பள்ளிக் கல்வித்துறை நேற்று (ஏப்ரல் 28) நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளது. தவிர +2 மாணவர்களுக்கான பொதுதேர்வுகள் மே மாதம் 11 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் மாநிலம் முழுவதும் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து, மே மாதம் முதல் வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என அசாம் மாநில உயர்கல்வி துறையின் தலைவர் தயானந்தா போர்கோஹெய்ன் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘கடந்த ஆண்டை போல +1 மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட மாட்டாது. மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று குறையும் பட்சத்தில் ஒத்தி வைக்கப்பட்டதான தேர்வுகள் மீண்டுமாக நடத்தப்படும்’ என தெரிவித்துள்ளார். மேலும் சிபிஎஸ்இ +2 மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள சூழலில் +2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து மே மாதம் 5 ஆம் தேதிக்கு மேல் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் மே 1, 2 இல் முழு ஊரடங்கு? தேர்தல் ஆணையர் விளக்கம்!
முன்னதாக அசாம் மாநிலத்தில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்பட வேண்டிய பொதுத்தேர்வுகள் தேர்தல் காரணமாக மே மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற பட்சத்தில் கூடுதலாக 50 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட உள்ளன. தவிர அசாம் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக மே மாதம் 12 ஆம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது.