தமிழகம் முழுவதும் மே 1, 2 இல் முழு ஊரடங்கு? தேர்தல் ஆணையர் விளக்கம்!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளதால் மே 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அறிவிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு தமிழக அரசே அறிவிக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தலைமை தேர்தல் அதிகாரி:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில் மே 2 ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகம் சேராமல் இருக்க முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் மே 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் வாக்கு எண்ணிக்கை காரணமாக மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும் என பரிந்துரை செய்தது. இந்நிலையில் இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு அவர்களிடம் கேட்டபோது, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நோய் பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்துவது குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை நடத்த உள்ளார்.
புதிதாக வீடு வாங்குவோருக்கான முக்கிய அறிவிப்பு – LIC வீட்டுக்கடன் ஆவணங்கள் விபரம்!
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருவள்ளூர் மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்குவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. அங்கு அமல்படுத்தப்பட உள்ள கூடுதல் கட்டுப்பாடுகள், மேலும் மே 1, 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.