200 பள்ளிகளில் கால்பந்தை ஊக்குவிக்கும் புதிய திட்டம் – மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
கால்பந்து:
இந்தியாவில் பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தவும் அவர்களை விளையாட்டில் ஈடுபடுத்தும் வகையில் மாநில அரசுகளும், அந்தந்த பள்ளி நிர்வாகமும் புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. தற்போது பள்ளிகளில் அனைத்து விதமான விளையாட்டுகளிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுகின்றனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த நிலையில் அருணாச்சல பிரதேச மாநில பள்ளிகளில் கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இத்திட்டம் 6 முதல் 13 வயதுக்குட்பட்ட வளரும் குழந்தைகளுக்கு கால்பந்து விளையாட்டை கற்று தருவதை நோக்கமாக கொண்டுள்ளது என்று கூறினார். இத்திட்டத்தை செயல்படுத்த கால்பந்து மேம்பாட்டு ஆணையம் ( FIFA) மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – தமிழகத்தில் வெடித்த பஸ் ஊழியர்களின் போராட்டம்!
Exams Daily Mobile App Download
முதல் கட்டமாக மாநிலத்தின் 200 பள்ளிகளில் கால்பந்தை ஊக்குவிக்கும் திட்டம் தொடங்கப்படும். மேலும் விளையாட்டு மைதானம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களைக் கொண்ட பள்ளிகள் இத்திட்டத்தை செயல்படுத்த தேர்ந்தெடுக்கப்படும். அதில் 50 முதல் 100 குழந்தைகளுக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.