அரியர் தேர்வு முடிவு விரைவில் வெளியிட உத்தரவு !!
முதுகலை பட்ட படிப்பிற்கு அதிக காலியிடங்கள் உள்ளதால் அனைத்து கல்லூரிகளுக்கும் அரியர் தேர்வு முடிவு விரைவில் வெளியிட உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரியர் தேர்வு :
கொரானா காரணமாக மாணவர்கள் கல்லூரிகளுக்கு வந்து தேர்வு எழுத இயலாததா காரணத்தால் இறுதி ஆண்டு மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆல் பாஸ் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். இதன்படி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடைபெற்றது. அரியர் எழுத விண்ணப்பித்து இருந்த அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிவிக்கும் படி உத்தரவிடப்பட்டதால் சில பல்கலைக்கழகம் மட்டும் இத்தேர்ச்சி முடிவை அறிவித்தது. ஆனால் இன்னும் பல பல்கலைக்கழக கல்லுரிகள் இந்த அரியர் தேர்ச்சி முடிவு குறித்து ஏதும் அறிவிக்கவில்லை.
உயர்கல்வித்துறை உத்தரவு:
இதனால் இளங்கலை பட்ட படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் உயர்கல்வி பயில முடியாமல் தவிக்கின்றனர். இதனால் கல்லூரிகளில் உயர்கல்விக்கு அதிக காலியிடங்கள் உள்ளது. எனவே மாணவர்களுக்கு அரியர் தேர்ச்சி முடிவு அறிவிக்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்களை உயர்கல்வி பயில அறிவுறுத்துமாறு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பல அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் வேலைக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர். எனவே பல்கலைக்கழகங்கள் விரைவில் அரியார் தேர்ச்சி குறித்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்