அண்ணா பல்கலை அரியர் தேர்வுகள் – ஏப்ரல் 2021 அட்டவணை வெளியீடு!!
தமிழகத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்வுகள் 8 வாரத்திற்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று அரியர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அரியர் தேர்வுகள் ரத்து:
கடந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரி தேர்வுகளும் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டது. அதனுடன் அரியர் தேர்வுகளையும் ரத்து செய்வதாக அரசு அறிவித்திருந்தது. இதனால் கடந்த அக்டோபர் மாதம் அரியர் தேர்வுக்கான மதிப்பீடுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதிக மதிப்பெண்களை பெற விரும்பும் மாணவர்கள் டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை நடக்கும் துணை தேர்வுகளில் கலந்து கொள்ள அனுமதி வழங்கியது.
தமிழகத்தில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு? தலைமை செயலர் முக்கிய ஆலோசனை!
எதிர்ப்பு:
தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்வு நடத்தாமல் தேர்ச்சி அறிவிக்க தடை விதித்தது. தேர்வுகளை ஆன்லைன் அல்லது ஆப்லைன் மூலம் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அட்டவணை வெளியீடு:
உயர் நீதிமன்றம் அரியர் தேர்வுகளை 8 வாரத்திற்குள் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் தமிழகத்தில் நடக்கும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் அரியர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்