பாஸ்கர் வீட்டில் பார்வதி பற்றி குறை சொல்லும் அர்ச்சனா – “ராஜா ராணி 2” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், பார்வதி தேர்வுகளில் பாஸ் ஆனதால் அவருடைய கல்யாண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதால் அர்ச்சனாவின் புதிய திட்டம் குறித்து ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ராஜா ராணி 2:
ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவின் கனவை நினைவாக்க சரவணன் உறுதுணையாக இருக்கிறார். இப்படி கதை சென்று கொண்டிருக்கும் நிலையில் சிவகாமிக்கு இந்த உண்மை தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் பார்வதி சந்தியாவின் உதவியுடன் படித்து எல்லா தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் பெற்று விடுகிறார். அதனால் பார்வதியின் கல்யாண ஏற்பாடுகளை குடும்பத்தில் அனைவரும் செய்ய முடிவு செய்கின்றனர். அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
நல்லி எலும்பு குழம்பு ருசித்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மீனா ஹேமா – வைரலாகும் வீடியோ!
அதில் பாஸ்கர் குடும்பத்தினரும் சரவணன் குடும்பத்தினரும் சேர்ந்து கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். அப்போது சந்தியா பார்வதி எல்லா தேர்வுகளிலும் முதல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருப்பதாக சொல்கிறார். அதனால் பாஸ்கர் குடும்பம் அதை நினைத்து பெருமையாக இருக்கிறார். உங்களை போல கௌரவமான குடும்பத்தை நான் பார்த்ததே இல்லை என பாஸ்கர் அப்பா சொல்ல நல்லபடியாக திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் கதையை முடிக்கும் ராதிகா – இன்றைய எபிசோட்! ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் அர்ச்சனா இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என நேராக பாஸ்கர் வீட்டிற்கு செல்கிறார். அங்கே பாஸ்கர் அம்மா அப்பாவிடம் பார்வதியை பற்றி பல புகார்களை சொல்கிறார். அப்போது பார்வதிக்கு ஒரு வேலையும் செய்ய தெரியாது என சொல்கிறார். உங்க நல்ல மனதிற்கும் குடும்ப பெருமைக்கும் அவள் சரியாக வரமாட்டார் என சொல்கிறார். நீங்க இப்போது சொன்னால் கூட பார்வதியை விட்டுவிட்டு என் தங்கை பிரியாவை திருமணம் செய்து வைக்கலாம் என சொல்ல, பாஸ்கர் அப்பா அர்ச்சனாவை எழுந்திரிக்க சொல்கிறார். நீ எல்லாம் ஒரு பெண்ணா என பாஸ்கர் அம்மா அர்ச்சனாவை திட்டுகிறார்.