தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில் கள் குடியுங்கள்; டாஸ்மாக் வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரம்:
தமிழகத்தில் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஆனது தெரிவித்துள்ளது. தற்போது தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முன்னணி கட்சிகள் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை குடியினால் எல்லோருக்கும் பிரச்சினை ஏற்படும். கள் குடியுங்கள்; டாஸ்மாக் வேண்டாம். ஒரு டாஸ்மாக் கடையல்ல அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வந்துள்ளோம் என்று பேசியுள்ளார்.
மேலும் கள்ளுக் கடைகளை திறந்து டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்றும் டெல்லிக்கு போகும் ஒரே வண்டி இந்த வண்டி தான், மற்றவை எல்லாம் லோக்கல் வண்டி என்றும் அவர் கூறியுள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்லு கடைகள் திறக்கப்படும் என்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் வாக்குறுதி அளித்து வருகிறார். தொடர்ந்து பேசிய அவர் பழங்குடி மக்களின் பாதுகாவலனாக மோடி இருக்கிறார் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.