கொரோனவை அடியோடு கொல்லும் கிருமிநாசினி தயாரிப்பு – அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அசத்தல்..!
கொரோனா நோயின் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா போராடிக்கொண்டு இருக்கிறது.ஏப்ரல் 15 வர இருந்த ஊரடங்கு மக்களின் நலன் கருதி மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்குஇடையே கொரோனா வைரசை அடியோடு கொள்ளும் கிருமி நாசினியை சென்னை, அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனாவை கொல்லும் ‘ஏ.யு.சானிடைசர்’
கொரோனா வைரஸ் உலகையே பயம் காட்டியுள்ளது. கொரோனா வைரசை கொல்ல எப்படி என தெரியாமல் உலக நாடுகள் ஆராய்ந்து வருகின்றன. கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. பரவலை தடுக்க கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர், இதை உபயோகித்தால் மட்டுமே கொரோனா பரவலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
கொரோனாவுக்கு வந்தாச்சு தடுப்பு மருந்து – அமெரிக்கா மருத்துவ குழு அதிரடி.!
ஆனால், வைரசை அழிக்க முடியாது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மாணவர்களும் கொரோனா வைரசை முழுமையாக அழிக்கும் ‘ஏ.யு.சானிடைசர்’ என்ற கிருமிநாசினி ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். பல்கலைக்கழகத்தின் என்.எச்.எச்.ஐ.டி எனப்படும் சுகாதார கருவிகள் மேம்பாட்டுக்கான தேசிய மையம் இந்த கிருமி நாசினியை உருவாக்கி உள்ளது.
என்.எச்.எச்.ஐ.டி சங்கர்
இதனை பற்றி என்.எச்.எச்.ஐ.டி.,யைச் சேர்ந்த பேராசிரியர் சங்கர் கூறியதாவது: நாங்கள் உருவாக்கிஉள்ள கிருமி நாசினி, கொரோனா வைரசை அழிப்பதை, அதன் மரபணு சோதனை மூலம் உறுதிப்படுத்திஉள்ளோம். ஏனெனில், கொரோனா வைரசும், நாங்கள் தயாரித்துள்ள கிருமி நாசினியும், ஒரே அமிலத்தை கொண்டு உள்ளன. இது, வைரசை அடியோடு அழிக்கிறது. கொரோனா நோயாளி களுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோரிடம், வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளது. அவர்கள், இந்த கிருமி நாசினியை பயன்படுத்தினால், கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதோடு, அடியோடு அழித்து விடும்.
இந்தியாவில் பிரிக்கப்படும் ‘ரெட் ஷோன்’ மாவட்டங்கள் – தமிழ்நாடு முதல் இடம்.!
இந்த கிருமிநாசினியை, கைகள், உடல் பகுதிகள், முக கவசங்கள், கையுறைகள், மருத்துவ உபகரணங்கள் என, எதிலும் பயன்படுத்தலாம். இப்போது, பயன்பாட்டில் உள்ள கிருமிநாசினிகளுடன், இந்த ஏ.யு.கிருமி நாசினியை சிறிதளவு கலந்தால் போதுமானது. இதனால், கிருமி நாசினிகள் விலை, 10 ரூபாய் அதிகரிக்கலாம்.
ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு எப்போது கட்டுப்பாடுகள் தளர்வு – மத்திய அரசு விளக்கம்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில், இந்த கிருமி நாசினியை தெளித்தாலும், அல்லது மூக்கில் சில சொட்டுகள் விட்டாலும், வைரஸ், மற்றவர்களுக்கு பரவுவது தடுக்கப்பட்டு விடும்; வைரசும் இறந்துவிடும். இதை, 200க்கும் அதிகமானோரிடம் பயன்படுத்தியதில், நல்ல பலன் கிடைத்து உள்ளது. இந்த கிருமி நாசினிக்கு, காப்புரிமை பெறும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட, அண்ணா பல்கலைக்கழகம் தயாராக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |