இந்தியாவில் பிரிக்கப்படும் ‘ரெட் ஷோன்’ மாவட்டங்கள் – தமிழ்நாடு முதல் இடம்.!

0
இந்தியாவில் பிரிக்கப்படும் ‘ரெட் ஷோன்’ மாவட்டங்கள் – தமிழ்நாடு முதல் இடம்
இந்தியாவில் பிரிக்கப்படும் ‘ரெட் ஷோன்’ மாவட்டங்கள் – தமிழ்நாடு முதல் இடம்

இந்தியாவில் பிரிக்கப்படும் ‘ரெட் ஷோன்’ மாவட்டங்கள் – தமிழ்நாடு முதல் இடம்.!

தற்போது கொரோனா நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட இடங்களை 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதிகளவிலான மாவட்டங்கள் ரெட் ஸோன் பகுதிக்குள் இடம்பெற்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

தமிழ்நாடு

இந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவையாக அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 20 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 170 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

ஹாட் ஸ்பாட் மாவட்டங்கள்

டெல்லியில் 10 மாவட்டங்களும், மகாராஷ்டிராவில் 14 மாவட்டங்களிலும், உத்தரப்பிரதேசத்தில் 13 மாவட்டங்களும், ராஜஸ்தானில் 12 மாவட்டங்களும் ஹாட் ஸ்பாட் பகுதிக்குள் வந்துள்ளன. ஆந்திராவில் 11 மாவட்டங்களில் ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெல்லியில் 14.5 மில்லியன் மக்கள் மக்கள் இந்த பகுதியில் குடியிருக்கின்றனர். மகாராஷ்டிராவில் 66.9 மில்லியன் மக்கள் இந்த மாநிலத்தில் இந்த ஹாட் ஸ்பாட் எல்லைக்குள் வருகின்றனர். மும்பை, மும்பை புறநகர், தானே ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் 20 மில்லியன் மக்கள் இதற்குள் வருகின்றனர்.

ஜூன் நான்காவது வாரத்தில்தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பு

1.21 பில்லியன் மக்கள் வசிக்கும் இந்தியாவில், 453 மில்லியன் மக்கள் இந்த ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்குள் வசிக்கிறார்கள். அதாவது மக்கள் தொகை அடிப்படையில் ஆந்திராவில் 90 %, டெல்லியில் 87 %, தமிழ்நாட்டில் 80 %, தெலங்கானாவில் 66%, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 63 %, மகாராஷ்டிரா 60 %, இமாச்சல பிரதேசத்தில் 53 %, ஜம்மு, காஷ்மீர் 53 %, லடாக்கில் 51 % பேர் இந்த எல்லைக்குள் வருகின்றனர்.

பீகார், ஜார்கண்ட், ஒடிசா, அசாம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 20 சதவீதத்துக்கும் குறைவான பகுதிகளே ஹாட்ஸ்பாட் பகுதிக்குள் வருகின்றன. ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு என்பது இந்த ரெட் ஸோன் பகுதிக்குள் வருபவர்களுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

ஹாட் ஸ்பாட் இல்லாத மாவட்டங்கள்

கோவா, அசாம் தவிர பிற வட கிழக்கு மாநிலங்கள் என 8 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் ஹாட் ஸ்பாட் பகுதிகள் ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 நாள்கள் புதிதாக எந்தவித பாதிப்பும் இல்லையெனில் மாநிலங்கள் க்ரீன் ஸோன் பகுதிக்கு மாற்றப்படும். நான்கு நாள்களில் நிலைமை இரட்டிப்பாகும் மாநிலங்கள் ரெட் ஸோன் பகுதிக்குள் கொண்டுவரப்படுகின்றன.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுபாஷ் சலுங்கே இது குறித்து கூறும்போது, “அரசு இவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தி கண்காணிப்பது வரவேற்கத்தக்கது. இதன் முக்கியத்துவத்தை தற்போது நேரடியாக உணர்ந்து கொள்ளமுடியாவிட்டாலும் இனிவரும் காலங்களில் அதன் மதிப்பு தெரியவரும்” எனக் கூறியுள்ளார்.

SSCயின் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!