அண்ணா பல்கலையில் எம்.டெக் மாணவர் சேர்க்கை ரத்து – ஐகோர்ட் கேள்வி!!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், அது குறித்து பதில் விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மாணவர் சேர்க்கை ரத்து:
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக் பயோடெக்னாலஜி மற்றும் கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக பல்கலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இடஒதுக்கீடு முறையை பின்பற்றி நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை நடத்த அண்ணா பல்கலை திட்டமிட்டு இருந்த நிலையில், 69% இடஒதுக்கீடு திட்டத்தை பின்பற்றுமாறு தமிழக அரசு சார்பில் பரிசீலிக்கப்பட்டது.
தமிழக அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – கலந்தாய்வு தேதி அறிவிப்பு!!
இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் எம்.டெக் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிட்டது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் இது தொடர்பாக நாளை பதில் தருமாறு உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்