தமிழக அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – கலந்தாய்வு தேதி அறிவிப்பு!!

0
தமிழக அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - கலந்தாய்வு தேதி அறிவிப்பு!!
தமிழக அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - கலந்தாய்வு தேதி அறிவிப்பு!!
தமிழக அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – கலந்தாய்வு தேதி அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பொருளியல் ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் தேதி மற்றும் செயல்முறைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

கலந்தாய்வு அறிவிப்பு:

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் அதிகளவிலான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதனால் ஆசிரியர்களின் தேவை அதிகரிக்கும் என்பதால், கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து விபரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், 2018-2019ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பொருளியல் பாட முதுகலையாசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது.

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிப்பு – முதல்வர் ஆலோசனை!!

அதில் தேர்வான ஆசிரியர்களுக்கு பணியிட ஒதுக்கீடு கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வரும் பிப்ரவரி 3ம் தேதி (நாளை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் கலந்து கொள்ள உள்ள ஆசிரியர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்டு உள்ள வரிசை எண்ணின் அடிப்படையில் பணியிட ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!