அண்ணா பல்கலை எம்.டெக் இடஒதுக்கீடு – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள இரண்டு எம்.டெக் படிப்புகளும் மத்திய அரசின் நிதியின் கீழ் செயல்படுகின்றது. இந்த படிப்புகளுக்கு மத்திய அரசின் இடஒதுக்கீடு மற்றும் மாநில அரசின் இடஒதுக்கீடு முறையை பின்பற்றுவதில் ஆரம்பத்தில் இருந்து குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் எம்.டெக் படிப்புகளுகளுக்கு மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் 49.5% இடஒதுக்கீடு முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.
பாரதிதாசன் பல்கலை 2021 ம் ஆண்டு மாணவர் சேர்க்கை – மார்ச் 15 விண்ணப்பிக்க இறுதி நாள்!!
பல்கலை தரப்பு:
மத்திய அரசின் இடஒதுக்கீடு முறைக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புதல் இல்லாமல் மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசின் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கூடுதலாக 10% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவு:
இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் சில கேள்விகளை அண்ணா பல்கலையிடம் எழுப்பியுள்ளது. மேலும், 10% இடஒதுக்கீடு இல்லாமல் புதிய பட்டியலை மத்திய அரசு வழங்குமாறு உத்தரவிட அண்ணா பல்கலை கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இறுதியாக 49.5% இடஒதுக்கீடு முறையில் மாணவர் சேர்க்கை நடத்த முன்னரே உத்ராவிடப்பட்டுள்ளதால், புதிய உத்தரவை பிறப்பிக்க முடியாது என்று நீதிமன்றம் அறிவித்தது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்