அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா – குடியரசு தலைவர் பங்கேற்பு!!
சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று சிறப்புறை ஆற்றினார்.
குடியரசு தலைவர்:
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 9 ஆம் தேதி தனி விமானம் மூலமாக சென்னை வந்த அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரில் சந்தித்து வரவேற்றார். மேலும் அவர் நேற்று (மார்ச் 10) நடைபெற்ற திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 16-வது பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார்.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து அவர் இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “அறிவு என்பது ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட தன்மையை கட்டமைக்கும் அடித்தளமாகும். கல்வி மாற்றத்திற்கான ஊக்கியாகவும், இளைஞர்கள் சமூக மாற்றத்தின் மிக சக்திவாய்ந்த அடையாளமாகவும் உள்ளனர்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் சம்பளம் – கிரேடு பே ரூ.4200 வழங்க கோரிக்கை!!
இன்று குடியரசு தலைவரின் சுற்றுப்பயணம் முடிவடைந்துள்ளது. இன்று அவர் தனி விமானம் மூலமாக சென்னையில் இருந்து டெல்லி செல்ல உள்ளார். இதனால் சென்னை பழைய விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.