தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் சம்பளம் – கிரேடு பே ரூ.4200 வழங்க கோரிக்கை!!
தமிழகத்தில் ஆசிரியர் சம்பளத்தில் ‘கிரேடு பே’ ரூ.4200-ல் வைத்து வழங்க வேண்டும் என தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
‘ரெடி ரெக்கானர்’:
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் தொடக்கக்கல்வி துறையின் கீழ் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்களில் ரூ.65,500க்கு மேல் சம்பளம் வழங்க ‘ரெடி ரெக்கானர்’ (உடனடி கணிப்பேட்டில்) இடமில்லை. இந்நிலையில் சம்பள குழு அரசாணையின் அடிப்படையில் ஒரு ஆண்டுக்கு 3% சம்பள உயர்வு வழங்கப்பட்டு உடனடி கணிப்பேட்டில் நீட்டித்து தயார் செய்து வழங்க வேண்டும் என அரசிடமும், ஒரு நபர் கமிஷனிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழக அரசு பிப்ரவரி 26 ஆம் தேதி தொடக்க பள்ளி ஆசிரியர்களின் சம்பள உயர்வுக்கான உடனடி கணிப்பேடு நீட்டித்து வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முழு முயற்சி மூலமாக கிடைத்தது. இதனால் பள்ளிக்கல்வித்துறைக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் ஏ.ஜோசப் சேவியர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் – கல்வித்துறை அதிகாரிகள் திட்டம்!!
இந்த அறிவிப்பினை தொடர்ந்து இடைநிலை ஆசிரியர் சம்பளம் கிரேடு பே ரூ.4200-ல் வைத்து வழங்க வேண்டும் என தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம் எனவும், சட்டமன்ற தேர்தல் மூலமாக ஆட்சிக்கு வரும் அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.