ஜனவரி 2 முதல் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!!
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக வருகிற ஜனவரி 2 முதல் 20ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தேர்வு அட்டவணை அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வுகள் தொடக்கம்:
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் கடந்த ஆண்டு தேர்வுகள் நடத்தாமலே இறுதியாண்டு மாணவர்கள் தவிர அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு யுஜிசி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தேர்வுகள் நடத்தாமல் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கூடாது எனவும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எனவே இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டன.
காவல் சார்வு ஆய்வாளர் தேர்வு உத்தேச பட்டியல் – இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்!!
இந்த கல்வியாண்டு தொடங்கி 6 மாத காலம் முடிவடைந்த நிலையில் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்த பல்கலைக்கழக குழு முடிவு செய்துள்ளது. இதன்படி அண்ணா பல்கலைக்கழக குழு வெளியிட்ட அறிக்கையில்,”ஜனவரி 2 முதல் 20 ஆம் தேதி வரை நடப்பு செமஸ்டருக்கான எழுத்துத் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும்” எனக் குறிப்பிட்டுள்ளது. 20 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்ற வீதம் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் தேர்வுக்கான அட்டவணையும் அதில் வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் ஐஐடி மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழக கல்லுரி மாணவர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், மாணவர்களை ஆன்லைன் மூலமாக படங்களை கற்க அரசு வலியுறுத்தி வருகிறது.
Download Now
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |