மே 5 முதல் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கம் நிறுத்தம் – மாநில அரசு அறிவிப்பு!!
பேருந்து சேவைக்கு தடை:
கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. மாநில அரசுகள் மக்களை காக்க பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஊரடங்குகளையும் சில தேவைக்கேற்ற தளர்வுகளையும் அறிவித்து வருகின்றன. ஆனாலும் நோய் பரவல் கட்டுக்குள் வரவில்லை. நாள்தோறும் தொற்று எஎண்ணிக்கை புதிய உச்சம் அடைகிறது. முன்னெச்சரிக்கையாக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து வருகிறது.
மேலும் இரவு நேர ஊரடங்குகளையும், முழு ஊரடங்குகளையும் அமல்படுத்தியுள்ளது. மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க அரசு வலியுறுத்துகிறது. மத்திய அரசு தங்கள் மாநிலங்களின் நோய் பரவலை பொறுத்து மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை அறிவித்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மே 20 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசாணை வெளியீடு!!
அதன்படி மாநில அரசுகள் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்குகளையும், புதிய கட்டுப்பாடுகளையம் அறிவித்து வருகின்றன. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தற்போது ஆந்திர மாநில அரசு நோய் தடுப்பு நடவடிக்கையாக அம்மாநிலத்தில் மே 5 முதல் பிற்பகல் 12 மணிக்கு பிறகு அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது. மேலும் அம்மாநிலத்தில் அண்டை மாநில பேருந்து போக்குவரத்தையும் தடை செய்வதாக மாநில அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்