தமிழகத்தில் அம்மா உணவகம் இனி செயல்படாதா? மக்களின் கேள்வி – மேயர் பதில்!
தமிழகத்தில் அம்மா உணவகத்தின் செயல்பாடுகள் குறித்து சில புகார்கள் எழுந்துள்ள நிலையில், இனி அம்மா உணவகம் செயல்படாது என்று தகவல்கள் வெளியாகியது.
அம்மா உணவகம்:
தமிழகத்தில் இருக்கும் ஏழை, எளிய மக்கள் தற்போதுள்ள விலை வாசியில் 3 வேலை சாப்பிடுவது சற்று சிரமமான காரியமாக தான் உள்ளது. அதை தவிர ஆதரவற்ற முதியவர்கள், கூலி வேலை செய்பவர்கள் போன்ற மிகவும் சிரமமான நிலையில் இருப்பவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் அம்மா உணவகம் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
இங்கு, இட்லி ரூ.1, சப்பாத்தி, ரூ.2, சாம்பார் சாதம், தயிர் சாதம் , தக்காளி சாதம் போன்ற உணவு வகைகள் ரூ. 5 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் பயனடைந்து வருகின்றனர். ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் இனி அம்மா உணவகம் செயல்படாது என்று தகவல்கள் பரவி வந்தது.
குரங்கு அம்மை வைரஸ் பெயர் மாற்றம் – WHO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இதற்காக சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா, தற்போது பயன்பாட்டில் இல்லாத அம்மா உணவகம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், மற்றபடி, அம்மா உணவகங்கள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.