ஆப்கானில் இருந்து முற்றிலுமாக வெளியேறிய அமெரிக்க படைகள் – கொண்டாட்டத்தில் தலிபான்கள்!

0
ஆப்கானில் இருந்து முற்றிலுமாக வெளியேறிய அமெரிக்க படைகள் - கொண்டாட்டத்தில் தலிபான்கள்!
ஆப்கானில் இருந்து முற்றிலுமாக வெளியேறிய அமெரிக்க படைகள் - கொண்டாட்டத்தில் தலிபான்கள்!
ஆப்கானில் இருந்து முற்றிலுமாக வெளியேறிய அமெரிக்க படைகள் – கொண்டாட்டத்தில் தலிபான்கள்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து அமெரிக்க ராணுவம் இன்று (ஆகஸ்ட் 31) முழுவதுமாக வெளியேறியிருக்கும் நிலையில், அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக தலிபான்கள் விண்ணை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தியுள்ள காணொளி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

அமெரிக்க படைகள்

ஆப்கானிஸ்தானில் வளர்ந்து வந்த தீவிரவாதத்தை முறியடிக்கும் நோக்கத்தில் அமெரிக்க ராணுவ படைகள் சுமார் 20 ஆண்டு காலமாக தலிபான்களுடன் போர் நடத்தி வந்தது. ஒவ்வொரு முறையும் தலிபான்கள் மற்றும் அமெரிக்க படைகளுக்கு இடையே நடைபெற்ற போரில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இருந்தாலும் ஏதோவொரு நம்பிக்கையோடு காத்திருந்த ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தற்போது அந்த நம்பிக்கை பொய்த்து போனது.

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் !

சமீபத்தில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றி தலிபான்கள் தங்களது வெற்றிக்கொடியை ஏற்றினர். இதையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு ஆதரவாக இருந்து வந்த அமெரிக்க படைகள், தலிபான்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்து ஆகஸ்ட் 31 ஆம் தேதியான இன்று அந்நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்திருந்தது. அதுவரை காபூல் விமான நிலையத்தை அமெரிக்க படைகள் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது.

இதனிடையே வெளிநாடுகளை சேர்ந்த மக்களை அந்தந்த நாடுகளை சேர்ந்த அரசு, விமானங்கள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றியது. அதே நேரத்தில் தலிபான்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்த அந்நாட்டு மக்கள் பலரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முயற்சித்தனர். இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி இன்று (ஆகஸ்ட் 31) அமெரிக்க ராணுவ படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த தகவலை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறை, காபூலில் தனது பணியை நிறைவு செய்ததாகவும், ஆப்கானிஸ்தானில் இருந்து கடைசி வீரராக மேஜர் ஜெனரல் கிரிஸ் டோனாஹூ என்பவர் சி-17 விமானம் மூலம் அங்கிருந்து வெளியேறியதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய வெற்றியை கொண்டாடும் விதத்தில், தலிபான்கள் வானை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!