நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 14) பொது விடுமுறை – மத்திய அரசு அறிவிப்பு!!
சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாளைய தினம் (ஏப்ரல் 14) நாடு முழுவதும் பொது விடுமுறை விடப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அன்றைய நாளில் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை:
நாடு முழுவதும் கடந்த வருட மார்ச் மாதத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் வீட்டில் இருந்தே வேலை செய்யும் நடைமுறைகளையும் ஊக்குவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஊரடங்கின் தொடக்கத்தில் பெரும்பாலான நாட்கள் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டதால் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு? முக்கிய ஆலோசனை!
இதனை விரைந்து முடிக்கும் நோக்கில் வாரத்தில் 6 நாட்கள் அரசு அலுவலகங்கள் இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. பின்னர் நோய்த்தொற்று குறைந்த காரணத்தால் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் அரசு விடுமுறைகளும் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் அன்று அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை விடப்படுவது வழக்கம்.
TN Job “FB Group” Join Now
அதன்படி நாளை (ஏப்ரல் 14) சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.