20,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு – அமேசான் நிறுவனம்..!
தற்போதைய நிலையில் ஒரு வேலைவாய்ய்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது உலக அளவில் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிப்பதற்காக இந்தியாவில் அமேசான் நிறுவனம் 20,000 பேரை புதிதாக பணியமர்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆன்லைனில் வணிகம் செய்யும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளதாகவும், ஊரடங்கினால் வெளியே செல்லமுடியாமல் மக்கள் ஆன்லைனில் வாங்குவதாலும் அமேசான் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வேலியிட்டு உள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் முக்கிய நகரங்களான ஹைதராபாத், புனே, கோவை, நொய்டா, கொல்கத்தா, ஜெய்ப்பூர் ஆகிய 13 நகரங்களில் தற்காலிகமாக 20 ஆயிரம் பேருக்கு 6 மாதம் வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டு உள்ளது. இதில் அதிகமானோர் வீட்டில் இருந்தே வேலை செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
படிப்புத் தகுதியாக குறைந்தபட்சம் 12ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் எனவும், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய ஏதேனும் ஒரு மொழியில் சரளமாக பேசும் திறன் படைத்தவராக இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் வேலையாட்கள் அவர்களின் திறன், வேலை பார்க்கும் இடம் ஆகியவற்றைப் பொறுத்து சம்பளம் வழங்கப்பட உள்ளது. 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற பல பயனுள்ள வேலைவாய்ப்பினை பெற எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |