உலகளவில் முன்னணி நிறுவனமான அமேசான் அதன் ஊழியர்களின் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை அனுமதி இன்றி கண்காணித்ததற்கு பாதுகாப்பு நிறுவனமான CNIL ரூ.290 கோடி அபராதம் விதித்துள்ளது.
அபராதம் அறிவிப்பு
உலகளவில் உள்ள முன்னணி நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், தங்களுடைய ஊழியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க ஒரு குறிப்பிட்ட வரைமுறை உண்டு. அதனை மீறி நிறுவனம் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு சட்டம் இருக்கிறது. அந்த வகையில் அமேசான் நிறுவனம் கண்காணிப்பதற்கு வைத்திருந்த அளவீட்டைவிட அதிக அளவில் ஊழியர்களை கண்காணித்து இருக்கிறது.
இதனை பிரெஞ்சு தரவு பாதுகாப்பு கண்காணிப்பாளராக CNIL கண்டறிந்துள்ளது. அதனால் அமேசான் நிறுவனம் CNILக்கு சுமார் ரூ. 290 கோடி அபராதம் கட்ட வேண்டும் என அறிவித்துள்ளது. ஆனால் அமேசான் நிறுவனம் இந்த புகார் தவறானது என குறிப்பிட்டுள்ளது. இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் ஒரு தனிநபரின் வேலைகளை வேவு பார்ப்பது என்பது கவலை அளிக்க கூடிய ஒன்று என நிறுவனம் தெரிவித்துள்ளது.