இந்திய ஊழியர்களுக்கு வருகிற நவம்பர் 30ம் தேதி வரை தான் வேலை – குண்டை தூக்கி போட்ட அமேசான்!
Amazon நிறுவனம் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் இதிலிருந்து மீண்டு வருவதற்கு பணியாளர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இந்த நிலையில் இந்திய ஊழியர்களை பணியில் இருந்து வெளியேறுமாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி நீக்கம்
உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்து கொண்டு வருவதால் பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சியை தக்க வைத்து கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் குறிப்பாக திறமையான ஊழியர்களை வைத்து கொண்டு மற்ற ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தொடங்கியுள்ளனர். அந்த வகையில் Amazon நிறுவனம் லாபம் தரும் ஊழியர்களை வைத்து கொண்டு மற்ற ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிறுவனம் இந்த வாரத்தில் மட்டும் சுமார் 10,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது போன்று இனி வரும் காலங்களிலும் திறமையற்ற பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்திய ஊழியர்கள் VSP திட்டத்தை பயன்படுத்தி கொண்டு பணியில் இருந்து வெளியேற இருப்பதாகவும் தகவல்கள் கிடைந்துள்ளன.
தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்க உதவித்தொகை – முதல்வர் வழங்கல்!
Exams Daily Mobile App Download
மேலும் வருகிற நவம்பர் 30ம் தேதிக்குள் VSP திட்டத்தை பயன்படுத்தி பணியில் இருந்து விடுபட அன்று காலை 6.30 மணிக்குள் பணியாளர்கள் இத்திட்டத்திற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட வேண்டும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் கையொப்பமிட்டவர்கள் 22 வாரங்கள் வரையிலான அடிப்படை ஊதியத்தை பெற தகுதியுடைவர்கள் எனவும் இவர்களுக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பலன்களும் கிடைக்கும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.