தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்க உதவித்தொகை – முதல்வர் வழங்கல்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்கினார்.
ஊக்கத்தொகை:
தமிழக அரசு மாநில அளவிலும், சர்வதேச அளவிலும் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. கொரோனா தொற்று தற்போது வெகுவாக குறைந்துள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் நடந்து வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
அப்போட்டிகளில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கலந்து கொண்ட 190 வீரர் ,வீராங்கனைகள் பதக்கங்களை வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவ்வாறு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் ,வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உயரிய ஊக்கத் தொகையை தற்போது வழங்கி உள்ளார்.
Exams Daily Mobile App Download
சென்னை கலைவாணர் அரங்கத்தில் விளையாட்டு துறை சார்பில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் 190 வீரர் ,வீராங்கனைகளுக்கு 4.85 கோடியில் உயரிய ஊக்கத் தொகை வழங்கி கௌரவித்து உள்ளார். மேலும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.