Airtel வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ரீசார்ஜ் திட்டம் – 500 MB டேட்டா இலவசம்!
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 500Mb தினசரி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல்:
நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தின் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக பலரும் வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்தனர். மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. எனவே பல தொலைத்தொடர்பு நிறுவனங்களும், போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். 28 நாட்கள் முதல் 1 வருடத்திற்கான சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகின்றனர்.
நவ.19 அன்று நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு – 580 ஆண்டுகளுக்கு பிறகான மிக நீண்ட சந்திர கிரகணம்!
ஏர்டெல் நிறுவனத்தில் ரூபாய் 249 திட்டத்துடன் 500MB தினசரி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் தினசரி 0.5 ஜிபி அல்லது 500 எம்பி டேட்டா பெற முடியும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1.5ஜிபி இலவச டேட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி மற்றும் 100 எஸ்எம்எஸ் முதலிய சலுகைகள் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும்.
500MB கூடுதல் டேட்டாவை எப்படி பெறுவது?
- இந்த அம்சத்தை பெறுவதற்கு ரூ.249 பேக் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
- அதன்பின் ஏர்டெல் தேங்க்ஸ் செயலியை திறந்து இலவச 500 எம்பி டேட்டாவை மீட்டுக்கொள்ளும் விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- ஒவ்வொரு நாளும் டேட்டாவை ரீடிம் செய்ய இந்த செயல்முறையை மீண்டும் செய்ய வேண்டும்.
- அதேபோல் ஒரு மாத அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு சோதனை, ஒரு வருட ஷா அகாடமி, அப்பல்லோ 24|7 வட்டம், இலவச ஹலோ ட்யூன்ஸ் சந்தா, விங்க் மியூசிக் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது.
- ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ரூ.249 பேக்குடன் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் காரணமாக, அதிகளவிலான வாடிக்கையாளர்கள் ரூ.249 பேக்கை தேர்ந்தெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.