நவ.19 அன்று நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு – 580 ஆண்டுகளுக்கு பிறகான மிக நீண்ட சந்திர கிரகணம்!
வரும் நவம்பர் 19ம் தேதி அன்று, 580 ஆண்டுகளுக்கு பின்னர், நிகழ இருக்கும் வானியல் அதிசயமான மிக நீண்ட பகுதியளவு சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. இந்த அதிசய நிகழ்வினை பற்றி விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதிசய நிகழ்வு:
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒறே நேர்கோட்டில் வரக்கூடிய நிகழ்வே கிரகணம் ஆகும். இந்த நிகழ்வு எப்போதும் பௌர்ணமி எனப்படும் முழு நிலவு நாளில் தான் ஏற்படும். கிரகணத்தின் போது சந்திரன் மீது விழும் சூரிய ஒளியை பூமி முழுமையாக மறைத்தால் முழு சந்திர கிரகணம் என்றும், ஒரு குறிப்பிட்ட பகுதியை மறைத்தால் அது பகுதி சந்திர கிரகணம் என்றும் கூறப்படுகிறது. இந்த நூற்றாண்டின் மிக நீண்ட பகுதி சந்திரகிரகணம் வரும் நவம்பர் 19ம் தேதி நிகழ இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட் – புத்தாண்டு பரிசாக சம்பளம் உயர்வு! மத்திய அரசு தகவல்!
அதில் பகுதி கிரகணமாக 3 மணி நேரம், 28 நிமிடங்கள் மற்றும் 24 வினாடிகள் நீடிக்கும் என்றும், முழு கிரகணமாக 6 மணி நேரம் 1 நிமிடம் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக நுட்பமாக சிவப்பு நிறமாக மாறும் நிலவை காண வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் இந்திய நேரப்படி நவம்பர் 19 அன்று மதியம் 12.49 மணிக்கு தொடங்கும் என்றும் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அறிவித்துள்ளது. மேலும், இதற்கு முன்னதாக இதுபோன்ற நீண்ட சந்திரகிரகணம் கடந்த 1,480ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி நடந்துள்ளதாகவும், இதேபோல், இனி அடுத்து வரும் 2,669ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி சந்திரகிரகணம் நிகழும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உயர்கல்வி பயில விருப்பமுள்ள மாணவர்களுக்கு முன்னணி வங்கிகளில் கல்விக்கடன் – முழு விவரம் இதோ!
இந்த அதிசய நிகழ்வு இந்தியாவில் வடகிழக்கு பகுதிகளில் உள்ள அருணாசலப்பிரதேசம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் மிக குறுகிய நேரத்திற்கு சந்திர உதயத்திற்கு பிறகு தான் தெரியும் என்றும், வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் தெளிவாக தெரியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 580 ஆண்டுகள் கழித்து நடக்க இருக்கும் இந்த வானியல் அதிசய நிகழ்வை காண மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.