தமிழகத்தில் ஓமிக்ரான் வகை கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்கும் படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா:
உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டில் பரவ துவங்கிய கொரோனா தொற்றின் ஆதிக்கம் தற்போது வரையிலும் இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போது கடந்து சில மாதங்களாக தமிழகத்தில் ஓமிக்ரான் வகை கொரோனா தொற்றின் தாக்கம் இருந்து வருகிறது. இந்த ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 5 லட்சம் மருத்துவ காப்பீடு – அமைச்சர் முக்கிய தகவல்!
எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், லேசான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சளி, சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது