ஆப்கானிஸ்தானில் புதிய அரசு – பெண்களுக்கு இடமில்லை! தாலிபான்கள் திட்டவட்டம்!
ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இந்த புதிய அரசில் முக்கிய பதவி வகிப்பவர்கள் குறித்த அறிவிப்பு இன்று பிற்பகல் வெளியிடப்படும் என்று தாலிபான்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம்:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ படைகள் வெளியேறியதை அடுத்து 20 வருடங்களுக்கு பிறகு தீவிரவாத அமைப்பான தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆப்கானில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. தாலிபான்கள் ஆட்சியில் இருந்து விடுபட வேண்டுமென்று அந்நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு செல்ல காபூல் விமான நிலையத்தில் கூட்டம் கூட்டமாக திரண்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஒரு பகுதி காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிழ்த்தினர்.
செப்.16 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இதற்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தாலிபான்கள் தலைமையில் அமையவுள்ள புதிய அரசில் முக்கிய பதவி வகிப்பவர்கள் குறித்த அறிவிப்பு இன்று பிற்பகல் வெளியிடப்படும் என்று தாலிபான்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தில் பிரதமர் மற்றும் அதிபருக்கும் மேலாக சுப்ரீம் லீடர் எனப்படும் உயர் தலைவர் செயல்படுவார். இந்த பதவிக்கு தலிபான் இயக்கத்தின் உச்ச அதிகாரம் பெற்ற முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாதாவை நியமிக்க தாலிபான்கள் முடிவு செய்துள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 45,352 பேருக்கு கொரோனா உறுதி – 366 பேர் உயிரிழப்பு!
முக்கிய பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை எனவும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதனை எதிர்த்து அங்குள்ள ஹெராக் நகரில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு ஏராளமான பெண்கள் போராட்டம் நடத்தினர். கல்வி, வேலைவாய்ப்பு, சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் பொது மன்றங்கள், சமூக நடவடிக்கைகள், அரசியல் ஆகியவற்றில் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று முழக்கமிட்டனர். இந்த உரிமைகளுக்கு நாங்கள் பல ஆண்டுகள் போராடி வருகிறோம் என்றும் தெரிவித்தனர்.