தமிழக அரசு மருத்துவக் கல்லுரிகளில் கல்விக்கட்டணம் உயர்வு – மக்கள் நல்வாழ்வுத்துறை அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கட்டணம் உயர்வு
இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டாக்டர் கனவுடன் பல மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி நாடு முழுவதும் 499 மையங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெறுகிறது.
TNPSC புதிய அறிவிப்பு வெளியீடு – சற்றுமுன் வந்த அறிவிப்பு!
இந்நிலையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்விக்கட்டணம் தற்போது உயர்ந்துள்ளது. அதன் படி கல்வி கட்டணத்துடன் ஜிஎஸ்டி வரியும் வசூல் செய்யப்படுவதால் கட்டணம் அதிகரித்து இருப்பதாக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.