இனி ரேஷன் கடைகளில் கூடுதலாக பொருள் வழங்கப்படும்…!! ” அமைச்சர் அறிவிப்பு’..!!
தமிழக அரசானது ரேஷன் கடைகளின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில், உணவு பொருட்களை மானிய விலையில் வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது கூடுதலாக கோதுமை வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, திண்டுக்கல் அருகே உள்ள வடக்காட்டில் புதிய ஊராட்சி அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் சக்கரபாணி, செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, “தமிழ்நாட்டிற்கு 25,000 டன் கோதுமை கொள்முதல் செய்வதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், இம்மாதம் முதல் கூடுதலாக கோதுமை வழங்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.
























