‘பாக்கியலட்சுமி’ ரேஷ்மாவின் சிங்கிள் மதர் ஸ்டோரி – திருமண தோல்வி டூ சீரியல் வெற்றி!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது புதிதாக ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. அவருக்கு இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில் தனது மகனிற்காக அவர் மீண்டும் சினிமா துறைக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.
நடிகை ரேஷ்மா:
விஜய் டிவியில் பிரம்மாண்டமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. ஏற்கனவே அவர் சூரி உடன் புஷ்பா புருஷன் என்ற காமெடி மூலம் பிரபலமானவர். இந்நிலையில் அவரது சிங்கிள் மதர் ஸ்டோரி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். ரேஷ்மா தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை ஜெனிஃபர் தான் நடித்து வந்தார். அதன் பின் அவர் கர்ப்பமாக இருப்பதால் அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.
விஜய் டிவியில் ‘பிக் பாஸ்’ சீசன் 5 – பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பு நேரம் மாற்றம்?
அதன் பின் ரேஷ்மா அந்த கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினர் ஆவார். இவர் முதன் முதலில் சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியல் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து நடித்த அந்த சீரியலுக்கு பிறகு, ‘மசாலா படம்’ படத்தில் கதாநாயகியாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். வெள்ளித்திரையில் 7 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மரகதவீணை, 10 மணி கதைகள், வாணி ராணி, பகல் கனவு என பல சீரியலில் நடித்தார். நடிப்பு மட்டுமில்லை சன் சிங்கர் ஷோவை தொகுத்தும் வழங்கி இருக்கிறார். இதற்கு இடையில் நடிப்பை விட்டு விலகி பிரபல செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.
லட்சுமி அம்மாவை பார்க்க முடியாமல் கதறி அழுத கண்ணன் – பாராட்டும் விஜே தீபிகா!
இவர் சென்னையில் பிறந்திருந்தாலும் வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில் தான். அதன் பின் அவர் ஏர்ஹோஸ்டில் வேலை பார்த்து வந்தார். அப்போது 18 வயதிலே அவருக்கு முதல் திருமணம் நடந்தது. பெற்றோர்களால் பார்த்து நடத்தி வைக்கப்பட்ட அந்த திருமணம் அவருக்கு சரியாக அமையவில்லை. அதிலிருந்து விவாகரத்து பெற்று 2 ஆவது காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் விதி அவரின் வாழ்க்கையில் விளையாட 2வது கணவரால் ரேஷ்மா கடும் மன உளைச்சல் மற்றும் துன்புறுத்தல்களை சந்தித்தார். இது பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கண்ணீருடன் பேட்டி அளித்திருப்பார். தனது மகனுக்காக மட்டுமே இத்தனை பிரச்சனைகளில் இருந்து மீண்டு வாழ்வதாக ரேஷ்மா பல இடங்களில் சொல்லி இருக்கிறார். தனது மகனுக்காக மட்டும் தான் மீண்டும் சினிமாவில் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.