லட்சுமி அம்மாவை பார்க்க முடியாமல் கதறி அழுத கண்ணன் – பாராட்டும் விஜே தீபிகா!
விஜய் தொலைக்காட்சி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், லட்சுமி அம்மா இறந்ததை கேட்ட கண்ணன் கதறி அழும் காட்சிகளை பார்த்த முன்னாள் ஐஸ்வர்யாவாக நடித்த விஜே தீபிகா தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் குடும்பமாக பார்க்கும் சீரியல்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில், கடந்த வாரம் காதல் திருமணத்தை ஏற்க முடியாமல் கவலையில் இருந்த லட்சுமி அம்மா இறந்து விட்டார். அந்த நேரத்தில் கண்ணன் வெளி ஊருக்கு சென்றதால் தகவல் தெரிவிக்க முடியவில்லை. ஊர் மக்கள் நெருக்கடியில் விரைவில் இறுதி சடங்குகள் நடத்தி முடிக்கப்பட்டது. தனம் கண்ணன் வரட்டும் என சொல்ல பெரியவர்கள் கேட்பதாக இல்லை.
மீண்டும் 8 வருடங்கள் கழித்து தொடங்கும் பாரதி கண்ணம்மா சீசன் 2? வெளியான ப்ரோமோ!
இந்நிலையில் கண்ணன் வந்ததும் அம்மாவின் இறப்பு போஸ்டரை பார்த்து அழுக தொடங்குகிறார். பின் அம்மாவை சுடுகாட்டிற்கு கொண்டு சென்று விட்டார்கள் என ஐஸ்வர்யா சொல்ல, கண்ணன் ஓடிச்சென்று பார்க்கிறார். அங்கே அம்மா உடல் எரியூட்டப்படுகிறது. அதை பார்த்து அவர் கதறி அழும் காட்சிகள் நமக்கே ஒரு மாதிரி சோகத்தை தருவதாக இருக்கிறது. இந்த காட்சியை பார்த்த முன்னாள் ஐஸ்வர்யா விஜே தீபிகா கண்ணனை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினாவின் புதுவித கர்ப்பகால போட்டோஷூட் – இன்ஸ்டா வைரல் !
அதில் டேய் நண்பா என்ன மாதிரி நடிக்கிறாய். எனக்கு உன்னை நண்பன் என சொல்ல பெருமையாக இருக்கிறது, இது எல்லாம் நடிப்பு என தெரிந்தாலும் நமக்கு அருகில் இருப்பவர் யாரோ ஒருவருக்கு நடப்பது போல இருக்கிறது என பாராட்டி குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் மொட்டை வேற அடித்து வேற மாதிரி நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் இவர் மட்டும் இல்லை சீரியல் பார்த்த அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.