ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டுமா? விதிமுறைகளில் முக்கியமாற்றம்!!

0
ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டுமா? விதிமுறைகளில் முக்கியமாற்றம்!!
ஆதார் அட்டையை புதுப்பித்தல் மற்றும் பதிவு செய்ததற்கான விதிமுறையை UIDAI அமைப்பு மாற்றம் செய்துள்ளது.
ஆதார் அட்டை:

இந்திய குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் கார்டு விளங்கி வருகிறது. மேலும், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது கட்டாயமாக பயனர்கள் ஆதார் கார்டினை புதுப்பிப்பு செய்ய வேண்டும். தற்போது ஆதார் அட்டையை புதுப்பித்தல் மற்றும் ஆதார் பதிவிற்கான புதிய படிவத்தினை UIDAIவெளியிட்டுள்ளது. அதாவது, 18 வயது முதல் அதற்கு மேற்பட்ட நபர்கள் படிவம் 1 மூலமாக ஆதாரை பரிந்துரை செய்யலாம். அடுத்ததாக, இந்தியாவிற்கு வெளியே முகவரி சான்றிதழ்களை பெற்று குடியுரிமை பெறாதவர்கள் படிவம் இரண்டிற்கு பரிந்துரை செய்யலாம்.

மத்திய அரசு பணியை பெற எளிய வழிமுறைகள் – இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!
அடுத்ததாக, 5 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் படிவம் மூன்றுக்கு பரிந்துரை செய்யலாம். அதேபோல, இந்தியாவிற்கு வெளியே முகவரி உள்ள 5 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் படிவம் நான்குக்கும், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் படிவம் ஐந்திற்கும், நாட்டிற்கு வெளியே முகவரி வைத்திருக்கும் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் படிவம் ஆறுக்கும், 18 வயதிற்கும் மேற்பட்ட குடியுரிமை பெற்ற நபர்கள் படிவம் ஏழுக்கும், 18 வயதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் படிவம் எட்டுக்கும் பரிந்துரை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!